"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்"- தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

புவனேஸ்வரி வெளியிட்ட விபச்சார நடிகைகள்... பட்டியல் - போலீஸ் கமிஷனரிடம் நடிகைகள் புகார்




"பூனைக்கண்' புவனேஸ்வரி வெளியிட்ட, விபச்சார நடிகைகள் பட்டியலில் உள்ள, "பெரிய' நடிகையை சிக்க வைக்கும் முயற்சியில், விபச்சார தடுப்புப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விபசார வழக்கில் கைதான டிவி நடிகை புவனேஸ்வரி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அடையாறு சாஸ்திரிநகர் 1வது அவென்யூவில் வசித்து வருகிறார் நடிகை புவனேஸ்வரி. இவர், "பாய்ஸ்" "குண்டக்க மண்டக்க" உள்ளிட்ட பல படங்களில் நடித்ததோடு, ஒரு படத்தையும் தயாரித்துள்ளார். மேலும், ஏராளமான தெலுங்கு படம், டிவி சீரியல்களில் நடித்து வந்தார். ‘பூனைக்கண்’ புவனேஸ்வரி என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு. இவர், கடந்த 10 நாட்களாக, சென்னையில் தங்கி விபசாரத்தில் ஈடுபடுவதாக விபசார தடுப்புப் பிரிவு போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் துணை கமிஷனர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் சந்திரதாசன் ஆகியோர் விசாரித்து வந்தனர்.



போலீசில் புவனேஸ்வரி பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது: என்னுடைய சொந்த ஊர், சங்கரன்கோவில்.





நெல்லையில் உள்ள மகளிர் கல்லூரியில் பிகாம் படித்தேன். கல்லூரியில் நடந்த பேச்சுப்போட்டியில் முதல் மாணவியாக வந்தேன். நாடகங்களிலும் நடித்துள்ளேன். நான் அழகாக இருப்பதால், தி.நகரில் உள்ள துணிக்கடை விளம்பரத்தில் நடிக்க கேட்டனர். நானும் சம்மதித்தேன். அதில் நடித்தபோது டி.வி. சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர், சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான், ஒரு அரசியல்வாதியுடன் எனக்கு மோதல் ஏற்பட்டது. அதனால் 2002ம் ஆண்டு விபசார வழக்கில் கைது செய்யப்பட்டேன். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தேன். என் கணவர் என்னை விட்டு பிரிந்து விட்டார். இந்தநிலையில் "பாய்ஸ்" படத்தில் விபசாரியாக நடித்தேன்.



அது முதல் மீண்டும் விபசார தொழிலில் வாய்ப்புகள் வந்தது. அதில் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தேன். எனக்கு பிரச்னை என்றால் சில முக்கிய புள்ளிகளும் அரசியல்வாதிகளும் உதவி செய்வதாக தெரிவித்தனர். அதனால், அவர்களுடன் நெருக்கமாக இருந்தேன். விபசார வழக்கில் கைது செய்யப்பட்டவுடன், அவர்களை தொடர்பு கொண்டேன். அவர்கள் உதவிக்கு வரவில்லை. என் வீட்டில் அரசியல்வாதிகள் பலருடன், விழாக்களில் கலந்து கொண்ட புகைப்படங்கள் உள்ளன. அதை வெளியிட விரும்பவில்லை.







கடந்த இருநாட்களுக்கு முன், விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை, "பூனைக்கண்' புவனேஸ்வரியை, விபச்சார தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்வதற்காக வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது, அவரது வரவேற்பறையில், மூத்த அரசியல்வாதி மற்றும் அவரது மகனுடன், புவனேஸ்வரி தனித்தனியாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த புவனேஸ்வரி, "என்னை கைது செய்தால், நீங்கள் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும்' என, மிரட்டினார். ஆனாலும், அதற்கு மசியாத போலீசார் அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.



விபச்சார தடுப்புப்பிரிவு போலீசாரிடம் புவனேஸ்வரி தெரிவித்த சில தகவல்கள்: ஒன்பதாவது படிக்கும் என்னுடைய மகனுக்காகத் தான் இத்தொழிலில் வேண்டாவெறுப்பாக ஈடுபடுகிறேன். என்னை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும், குறைந்த தொகைக்கு செல்கிறேன். நான் வேண்டாவெறுப்பாக சம்மதம் கூறிய நபரை வைத்து, என்னை சிக்க வைத்து விட்டனர்.நான் மட்டும் தான் சினிமாவில் மோசம் என்று நினைக்காதீர்கள்... ஒரு மணி நேரத்திற்கு பல லட்ச ரூபாய் வரை வாங்கும் நடிகைகளை எனக்கு தெரியும்.











அவர்களெல்லாம் விமானத்தில் பறந்து சென்று விபச்சாரம் செய்வதால் நீங்கள் (போலீஸ்) கண்டுகொள்வதில்லை.நடிக கணவர்களை பிரிந்துள்ள இரு நடிகைகள்' (சீதா, நளினி), சுரப்பி பிரச்னையால் உப்பி போயிருக்கும் இரு மலையாள குண்டு நடிகைகள் (அஞ்சு, ஷகீலா), கலைச்சேவை குடும்பத்தைச் சேர்ந்த இரு மூத்த நடிகைகள் (மஞ்சுளா, ஸ்ரீபிரியா) ஆகியோர் ஆள் வைத்து விபச்சாரம் செய்கின்றனர்."பெரிய' நடிகை என பெயரெடுத்த தற்போதைய முன்னணி நடிகை (நமீதா), ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வசூல் செய்கிறார். ஆனால், நம்பிக்கைக்குரிய மேனேஜர்கள் மூலம் அவர் விபச்சாரம் செய்வதால், அவரை நெருங்குவது மிகக்கடினம்.இவ்வாறு புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடிகைகளை சிக்கவைப்பது எப்படி என்பது குறித்தும் விபச்சார தடுப்புப்பிரிவு போலீசாருக்கு சில தகவல்களை புவனேஸ்வரி கூறியுள்ளார். அதனால், "பெரிய' நடிகையை சிக்கவைக்கும் முயற்சியில் இப்பிரிவு போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.









இந்த தொழிலில் இருக்கும் பல முதலைகள் சுதந்திரமாக திரியும்போது, என்னைப் போன்றோரை போலீசார் கைது செய்வது ஏன் என்று புரியவில்லை. குற்றமற்றவள் என்று நிரூபித்து விரைவில் வெளியில் வருவேன். இவ்வாறு தனது வாக்குமூலத்தில் புவனேஸ்வரி கூறியிருப்பதாக, போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர். தற்போது, புழல் சிறையில் புவனேஸ்வரி அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினமே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில், 6 முன்னணி நடிகைகளை போலீசார் குறி வைத்திருந்தனர். அவர்களுக்கும் வலை விரித்தனர். அதில் முதலிலேயே புவனேஸ்வரி சிக்கினார். இதனால், மேலும் 5 நடிகைகளுக்கு போலீசார் வலை விரித்துள்ளனர். போலீசார் வலை விரித்துள்ள தகவல்கள் வெளியானதால், பிரபல நடிகைகள் பீதியில் உள்ளனர்.

புவனேஸ்வரி வாக்குமூலம் : கொடுத்ததாக வெளியான தகவல்; போலீஸ் கமிஷனரிடம் நடிகைகள் புகார்- நடிகர் சங்கத்தில் 7-ந்தேதி கண்டன கூட்டம்


நடிகை புவனேஸ்வரியை விபசார வழக்கில் போலீஸ் கைது செய்துள்ளது. அவர் போலீசாரிடம் மேலும் சில நடிகைகள் பற்றி அவதூறாக வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியாயின.

இதனால் நடிகர், நடிகைகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி கடிதம் அனுப்பினார்.

அதில் விபசார வழக்கில் கைதான புவனேஸ்வரி போலீசில் தெரிவித்ததாக முன்னணி நடிகைகள் பற்றிய அவதூறு செய்தியால் அதிர்ச்சி அடைந்தோம். சம்பந்தப்பட்ட நடிகைகளும், அவர்களின் குடும்பத்தினரும் ஒட்டுமொத்தமாக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில் நடிகர், நடிகைகள் இன்று நடிகர் சங்கத்தில் கூடினார்கள். நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தலைமையில் அவசர கூட்டம் நடத்தினார்கள்.

நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, புவனேஸ்வரி வாக்குமூலத்தில் தெரிவித்ததாக அவதூறு கூறப்பட்ட நடிகைகள் மஞ்சுளா, நளினி, ஸ்ரீப்ரியா, சீதா, அஞ்சு ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். நமீதா, ஷகிலா இருவரும் வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததால் வரவில்லை.

நடிகர்கள் முரளி, பெஞ்சமின், மயில்சாமி, சின்னி ஜெயந்த், நடிகைகள் குயிலி, பாத்திமா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புவனேஸ்வரி கைது தொடர்பாக நடிகைகள் பற்றி வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வருகிற 7-ந்தேதி நடிகர் சங்கத்தில் கண்டன கூட்டம் நடத்துவது என்றும், நடிகர்- நடிகைகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பின்னர் சரத்குமார் தலைமையில் அனைவரும் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்தார்கள். தங்களை பற்றி அவதூறாக செய்தி வந்திருப்பதாக மஞ்சுளா, நளினி, சீதா, ஸ்ரீப்ரியா, அஞ்சு ஆகியோர் கமிஷனரிடம் ஆவேசப்பட்டு பேசினார்கள். 25 நிமிடம் கமிஷனரிடம் பேசினார்கள்.

இச்சந்திப்பு முடிந்து வெளியே வந்த சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் குறித்து அவதூறான செய்திகள் வெளிவந்தது. புவனேஸ்வரி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இதுபோன்ற செய்திகள் வந்துள்ளதாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக இன்று போலீஸ் கமிஷனரை சந்தித்து கேட்டோம். அதற்கு பதில் அளித்த அவர் இதுபோன்று எந்தவிதமான வாக்குமூலமும் புவனேஸ்வரி அளிக்கவில்லை என்று கூறினார். இதுதொடர்பாக போலீசிடம் எந்தவித ஆதாரமும் இல்லை என்று கமிஷனர் தெரிவித்தார்.

இதை வைத்து பார்க்கும்போது யூகத்தின் அடிப்படையிலேயே நடிகைகள் பற்றி செய்தி வெளியாகி இருப்பது தெரிகிறது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகிற 7-ந்தேதி மாலை 6 மணிக்கு நடிகர் சங்க வளாகத்தில் கண்டன கூட்டம் நடத்த உள்ளோம்.

மேலும் பாதிக்கப்பட்ட நடிகைகள் தனித்தனியாக தங்கள் வக்கீல்களுடன் கலந்து ஆலோசித்து மானநஷ்ட வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர். நடிகைகள் பற்றி இதுபோன்ற அவதூறு செய்திகள் வெளியிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். Bookmark and Share



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections